Archive for ஆகஸ்ட், 2008

உசுரு

போன வாரம் மொபைல் வாங்க போன கதைய படிச்சிருப்பீங்க(ங்கிற நம்பிக்கையில)…போகும் வழியில் பாண்டி பசார் காவல் நிலையம் எதிரில் ஒரு கும்பல் நின்று கொண்டிருந்தது. எங்க கூட்டம் இருந்தாலும் தான் நாங்க எட்டி பார்ப்போமே! அந்த பழக்கத்தில் எட்டி பார்த்தால், ஒருவர் தலையில் பலத்த காயத்துடன் ரத்த சகிதமாக படுத்துக் கொண்டிருந்தார். அவர் மண்டையில் உள்ள சதைகள் அனைத்தும் பிய்ந்து நிறைய ரத்தம் சிந்திக் கொண்டிருந்தது. யாரோ அவரை தூக்க முற்பட்டார். அவர் உடல் வெட்டி வெட்டி இழுத்தது. அருகில் ஒரு இரு சக்கர வாகன ஓட்டி கீழே விழுந்த தன் வண்டியை எடுத்துக் கொண்டிருந்தார். அதனால், அப்பொழுது தான் இந்த விபத்து நடந்திருக்க வேண்டும். அடிபட்டவர் சாலையை கடக்க முற்பட்டவர் போல. அருகே ஒரு போக்குவரத்து காவலாளி, சிரித்தபடியே இன்னொருத்தருடன் சுவாரஸ்யமாக பேசிக்கொண்டிருந்தார். இன்னொருவர் அடிபட்டவருக்கு ஒரு சொம்பு நிறைய தண்ணீர் கொடுத்துக் கொண்டிருந்தார்.

அப்பொழுது நேரம் கடந்து கொண்டிருந்தது. சாலையில் சென்று கொண்டிருந்த ஒருவர் காரிலிருந்து இறங்கி நேரே எதிரில் இருந்த (எதிரில் என்றால் சாலையின் மறுபுறம்) காவல் நிலையத்திற்கு சென்று காவலர் ஒருவரை கூட்டி வந்தார். இவருக்கு கோபம். யாரும் உதவக்கூடிய நிலையில் இல்லை என்று. வந்த காவலரும் மேப் போடும் ஆவலில் தான் இருந்தார். சாலையில் இருந்தவர்கள் அந்த வழியே போகும் ஆட்டோக்களை நிறுத்த முயன்றால் எந்த ஆட்டோக்காரரும் நிறுத்தவில்லை. எல்லோரும் கையை காண்பித்து முடியாது என்று சென்று விட்டனர். நாங்கள் சாலையின் மறு பக்கம் நின்றிருந்தோம் (காவல் நிலையம் முன்பு). அந்த வழியே செல்லும் ஆட்டோக்களை நிறுத்த முயன்றோம். ஆனால் யாரும் நிறுத்த விரும்பவில்லை.

பின், அங்கு (அரட்டை அடித்துக்கொண்டு) இருந்த போக்குவரத்து காவலரிடம் மற்றவர்கள் அழுத்தி சொல்ல, அந்த வழியாக வந்த மற்றொரு ஆட்டோவை நிறுத்தி (இதை முன்னமே செய்யலாமில்ல…) உள்ளே இருந்த சவாரியை இறக்கிவிட்டு அடிபட்டவரை ஏற்றிக் கொண்டு புறப்பட்டது. அந்த ஆட்டோ ஓட்டுனரும் 100 ரூபாய் சவாரி போச்சே என்று புலம்பிக் கொண்டே அடிபட்டவரை ஏற்றிக் கொண்டு சென்றார்.

என்னதான் ஒருவர் மோசமாக காயம் பட்டாலும், அவரை சுற்றி நடப்பவை கண்டிப்பாக அடிபட்டவரால் (அவரையும் அறியாமலேனும்) உணர முடியும். அந்த நேரத்தில் சுற்றி இருப்பவர்கள் அவருக்கு உதவாமல் இருப்பதும் ஒரு வகையில் அவரை மேலும் மேலும் கொல்வதே. அவருடைய மன உறுதி கண்டிப்பாக குலையும். அவரால் காது கொடுத்து கேட்க முடியுமோ இல்லையோ, அவருக்கு தைரியம் சொல்ல வேண்டும், ‘தேவா! மூச்சு விடு தேவா’ என்பது போல.

‘அன்பே சிவம்’ படத்தில் நச்சென்று சொல்லப்பட்டிருக்கும். அடிபட்டு மருத்துவமணையில் சிவம் படுத்திருக்கும் பொழுது அவரை பார்க்க வரும் ராமசாமி படையாச்சியிடம் சிஸ்டர் ஒருவர் ‘சிவம் மிக சீரியஸாக இருக்கிறார். கடினமான சொற்களைக்கூட தாங்கக்கூடிய நிலையில் இல்லை’ என்று சொல்லுவார். உள்ளே செல்லும் ராமசாமி படையாச்சி, சிவமிடம் ‘செத்துப் போ’ என்று அழுத்தி அழுத்தி சொல்ல, சிவத்தின் பல்ஸ் வெகுவாக குறைய ஆரம்பிக்கும். அபாய கட்டத்தை அடையும் பொழுது அவர்களை வெளியேற்றி அந்த சிஸ்டர் ‘டோன்ட் வொர்ரி மை சைல்ட். யூ வில் பெ ஆல்ரைட்’ என்று (உதட்டசைவு மட்டுமே) பார்க்கும் சிவத்தின் பல்ஸ் நார்மல் ஆகும். இது ஒரு நல்ல உதாரணம். உயிர் பிழைப்பதற்கும் இறப்பதற்கும் நூலிழை தான் வித்தியாசம். நாமெல்லாம் எப்பொழுது தான் உணருவோமோ?

ஒவ்வொரு வருடமும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் சாலை விபத்துக்களால் இறக்கிறார்கள் என்று NHAI சொல்கிறது. இதில் பெரும்பாலும் நிகழும் இறப்புகள் தடுக்கப்படக்கூடியவையே என்கிறது. நாம் செய்ய வேண்டியதெல்லாம், அடிபட்டவரை முடிந்த அளவில் விரைவாக மருத்துவமனை கொண்டு செல்லவேண்டும், அவ்வளவே. அடிபட்டவருக்கு எந்த மருத்துவமனைகளும் (at least) முதலுதவியாவது செய்யாமல் இருக்க முடியாது. இதையே உச்ச நீதிமன்றமும் உறுதி செய்திருக்கிறது.

சாலையில் செல்லும் பொழுது தினமும் ஓரிரு ஆம்புலன்ஸ்களையாவது பார்க்க நேரிடுகிறது. அப்பொழுது நம் மக்கள் நடந்து கொள்ளும் விதம் நம்மை பதபதக்கவைத்து விடுகிறது. ஆம்புலன்ஸுடன் போட்டி போட்டுக் கொண்டு பின்னாலேயே செல்கின்றனர் (மிஸ்டர். பீன் மாதிரி). அப்பொழுது தான் வழி சுலபமாக கிடைக்குமாம். ஒரு ஆம்புலன்ஸ் நம்மை கடக்க வேகமாக வருகிறதென்றால் நாம் நம்முடைய வாகனத்தை ஓரம் கட்டிவிடவேண்டும். அது நம்மை கடந்தவுடன் உடனே அதன் பின்னாலேயே போக கூடாது. காரணம், அந்த ஆம்புலன்ஸ் முன்னால் உள்ள மற்ற வாகனங்கள் ஓரம் கட்ட இடம் இல்லாமல் போய்விடும்.

நினைத்து பாருங்கள். ஒரு நாள் நாமும் அந்த வாகனத்தில் செல்ல நேரிட்டால் நம் மனநிலை எப்படி இருக்கும் என்று.

உங்களுடன் பகிர்ந்து கொள்ள




Right to Emergency Care

Supreme Court Judgement
Date of Judgment: 23/02/2007.
Case No.: Appeal (civil) 919 of 2007

The Supreme Court has ruled that all injured persons especially in the case of road traffic accidents, assaults, etc., when brought to a hospital / medical centre, have to be offered first aid, stabilized and shifted to a higher centre / government centre if required. It is only after this that the hospital can demand payment or complete police formalities. In case you are a bystander and wish to help someone in an accident, please go ahead and do so. Your responsibility ends as soon as you leave the person at the hospital.
The hospital bears the responsibility of informing the police, giving first aid etc.,
Please do inform your family and friends about these basic rights so that we all know what to expect and what to do in the hour of need. Please not only go ahead and forward, use it too!!!!





Road Accident

At Chennai…..If you happen to see/witness/involve in an accident.. Just dial +91-044-28150700 and inform them about the accident and place, REST THEY WILL TAKE CARE. This belongs to Trauma care consortium is a non profitable organization and they help people who need medical facilities because of a ROAD accident
Ambulance in Chennai
http://www.madrastimes.com/ambulance_HL.htm
Electricity in Chennai
http://www.madrastimes.com/electricity_HL.htm
Fire Station in Chennai
http://www.madrastimes.com/firestations_HL.htm
Hospital in Chennai
http://www.madrastimes.com/hospitals_HL.htm
Police Station in Chennai
http://www.madrastimes.com/policestation_HL.htm

Add comment ஆகஸ்ட் 12, 2008

Univercell-ம் அயோக்கிய ஆடித்தள்ளுபடியும்…

நேற்று வேறொருவருக்கு நோக்கியா அலைபேசி வாங்கலாமென்று பான்டி பசாரில் இருக்கும் யூனிவர்செல்-லுக்கு சென்றிருந்தேன். நோக்கியா 3600 வாங்கும் யோசனையில் சென்றிருந்தேன். அங்கு சென்றவுடன் என் நாக்கில் சனி நர்த்தனம் ஆடிற்று. ‘ஆடித்தள்ளுபடி எந்த எந்த மாடலுக்கு’ என்று கேள்வி கேட்டேன். பின் தான் தெரிந்தது அது சும்மா ஒரு விளம்பரத்திற்கு தான் என்று. கடைசியில் வெகு வெகு சொற்பமான, ஓடாத மாடல்களுக்கே ஆடித்தள்ளுபடி என்று. சரி! விடக்கூடாது என்று மொபைல் மாடல்களை காட்டுங்கள் என்ரு கேட்டேன். சில மாடல்கள் சொன்னார்கள்.

எந்த மாடல் ஓடாதோ அந்த மாடல்களுக்கு ஆடித்தள்ளுபடி என்று தள்ளிவிடுகிறார்கள். அதுவும் ஒருவர் ஒரு மாடலை சொன்னால், அது நமக்கு பிடித்து போனால் உடனே இன்னொருவர் ‘இல்லை, இந்த மாடலுக்கு இல்லை’ என்பார். எல்.ஜி.-யில் (நாட் ப்ரம் ம.தி.மு.க) ஒரு மாடல் விலை 20K என்றும் அந்த மாடல் ஆடித்தள்ளுபடியில் 10K என்றும் சொன்னார்கள். சரி அதை காண்பியுங்கள் என்று சொல்ல, அதை எடுத்து வந்தார்கள். அது 5MP கேமரா உள்ள மாடல். மாடலும் ஓ.கே. நோக்கியா 3600-ன் விலை 9600 ரூபாய். சரி! 20K அலைபேசி 10K-க்கு கிடைக்கிறதே என்றும், வழக்கமாக நோக்கியா தான் வாங்குகிறோம், ஒரு சேஞ்சுக்கு மற்ற கம்பேனி வாங்கலாம் என்று ஒரு யோசனை இருந்ததாலும், முக்கியமாக யூனிவர்செல் மேல் நம்பிக்கை இருந்து தொலைத்ததாலும் வேறு எந்த கேள்வியும் கேட்காமல் வாங்கி வந்தேன். வாங்கும் நோக்கில் செல்லவில்லை. சும்மா பார்த்து வரலாமே என்று தான் சென்றேன். பின் காற்று வாங்க போன இடத்தில் கழுதை வாங்கி வந்த கதையாக, இதை வாங்கி வந்தேன்.

அவர்கள் சொன்னது இந்த மாடலின் விலை 20K, தள்ளுபடி போக 10K என்று. ஆனால், இன்று அலுவல் வந்ததும் அதன் விலையை அவர்களுடைய வலையில் பார்த்தால் அதன் விலை 10,500+ தான். சரி தள்ளுபடி போக போட்டிருப்பார்களோ என்று பார்த்தால் மற்ற கடைகளிலும் இதே விலை தான் (இதில் இன்னொருத்தர் அந்த மொபைல் விலை 13K என்றும் ஆடித்தள்ளுபடியில் 10K என்றும் உளரினார். அதுவும் தவறு). கோபமுடன் அவர்களை தொடர்பு கொண்டு கேட்டால், ‘எங்கள் கடையில் விலை 10K தான்’ என்றார்கள். அப்புறம் ஏன் தள்ளுபடி என்று போடுகிறீர்கள் என்றால், MRP விலை 27+ அதை ஒப்பிட்டு பார்த்தால் 5MP கொண்ட இந்த மொபைல் சீப் தானே என்று வியாக்கியானம் பேசினார்கள். அதை நீங்க சொல்லக்கூடாது, நாங்க சொல்லனும், ‘சீப்’பா என்று.

மேலும், அந்த மாடலின் ஒர்ஜினல் விலை 27K. இப்பொழுது தள்ளுபடியில் எல்.ஜி.யே இந்த விலைக்கு கொடுகிறது. அப்புறம் எதற்கு இந்த மொள்ளமாறித்தனம்? கேட்டால் பதில் இல்லை.

இது தான் யூனிவர்செல்-லின் ஆடித்தள்ளுபடியின் லட்சனம்.

மேலும், என் நோக்கியா 6300-ன் டிஸ்ப்லே அவுட். எவ்வளவு ஆகும் என்று விசாரித்தால் வெளியில் 1300 ரூபாய் ஆகும் + ஒரு நாளின் மற்றிவிடலாம் என்று சொன்னார்கள். அதுவும் ஒரிஜினல் டிஸ்ப்ளே. (இது எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை). அதே யூனிவர்செல்-ல் 2800 ரூபாய் + 7 நாட்கள் ஆகுமாம்.

இனி யூனிவர்செல்-க்கு செல்லவேகூடாது என்று முடிவெடுத்துவிட்டேன்.

இது இங்கு மட்டும் இல்லை. சென்ற வாரம் சரவணா ஸ்டோருக்கு சென்றிருந்தேன். திரும்பும் இடமெல்லாம் ஆடித்தள்ளுபடி விளம்பரங்கள் தொங்கிக் கொண்டிருந்தன. வழக்கமாக சோப் + அதன் சம்பந்தப்பட்ட பொருட்கள் இருந்தால் அதன் மேல் ஒரு தகவல் பலகை இருக்கும். உதா, 1+1 ஆஃப்பர் என்று. அதே போல எல்லா இடங்களிலும் ஆடித்தள்ளுபடி என்று தொங்க விட்டிருந்தார்கள். ‘சரிங்க! இதுக்கு தள்ளுபடி உண்டா’ என்று கேட்க. ‘இல்லை! அதோ அங்கு ஒரு மூளையில் இருக்கே, அந்த ஷெல்ஃபுக்கு மட்டும் தான்’ என்றார்கள்.’ அப்புறம் எதற்கு எல்லா இடங்களிலும் ஆடித்தளுபடின்னு போட்டிருக்கீங்க?’ என்றால் சிரிப்பு தான் பதில்.

ஆக, வாடிக்கையாளர்களே தெய்வம்! வாடிக்கையாளர்களே முட்டாள்களும்.

போங்கடா நீங்களும் உங்க, அயோக்கிய, ஆடித்தள்ளுபடிகளும்.

26 comments ஆகஸ்ட் 11, 2008


மேல்

அண்மைய இடுகைகள்

அண்மைய மறுமொழிகள்

சீனு மேல் வெஜிடேரியனிசம்
shri ramesh sadasiva… மேல் உ.போ.ஒ: ‘அறிவாளி’…
shri ramesh sadasiva… மேல் வெஜிடேரியனிசம்
சீனு மேல் உ.போ.ஒ: ‘அறிவாளி’…
nigdyn மேல் உ.போ.ஒ: ‘அறிவாளி’…

சுவடுகள்

Blog Stats