Archive for நவம்பர், 2008

முதலில் மீடியாவை தாக்கித் தொலையுங்கள்

கடந்த 40 மணிநேரமான என்.டி.டி.வி-யும், எச்.டி-யும், சி.என்.என் -ம், டைம்ஸ் நவ்-ம் செனையை விடவும் அதிகமாக சந்தோஷ மழையில் நனைந்து கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு தான் அல்வா போல செய்திகள் கிடைத்திருக்கிறதே. தேங்க்ஸ் டு சிவராஜ் பாட்டீல் அன்ட் தேர் வொன்டர்ஃபுல் டீம். இந்த நான்கு பிரதான சேனல்களின் டிஆர்.பி ரேட்டிங் எங்கோ போயிருக்கும். இரண்டு விடுதிகளிலும் இருக்கும் தீவிரவாதிகளுக்கு தான் யாருக்கு நன்றி சொல்லவேண்டும் என்ற குழப்பம் அதிகம். சிவராஜ் பாட்டீலுக்கு மட்டும் சொன்னால் போதும் என்று நினைத்தவர்கள், இப்பொழுது இந்த மேற்கூறிய நான்கு சேனல்களுக்கும் நன்றி சொல்ல வேண்டிய நிர்பந்தம். துப்பாக்கிகளை கீழே போட்டுவிட்டு கையை பிசைந்து கொண்டிருப்பார்களோ என்னவோ (டெலிகேட் பொசிஷன்)!!

காரணம், 100+ உயிர்களை எடுத்தவர்களுக்கு போனஸாக சில பல கமாண்டோக்களில் உயிரையும் இலவசமாக கூட்டிக் கொடுத்திருகின்றார்களே, சாரி, காட்டிக் கொடுத்திருகின்றார்களே! இவங்க அவங்க லிஸ்ட்லயே இருந்திருக்க மாட்டார்கள். ஆனால், நிமிடத்திற்கு ஒரு முறை என்ன நடக்கிறது என்று தெரிவிக்கிறோம் என்ற போர்வையில் அவர்கள் அடுத்த கட்ட நடவடிக்கைகளை அப்படியே அள்ளிக் கொண்டு தீவிரவாதிகளுக்கு சமர்ப்பிக்கிறார்கள். உள்ளே இருப்பவர்களுக்கு என்ன டி.வி. பார்க்கவே முடியாதா? என்.எஸ்.ஜி-க்கள் சாப்பர் மூலமாக மேல் தளத்தில் இறங்குவதை அப்படியே உயிருடன் ஒளிப்பரப்பி இவர்களை சாகடிகிறார்கள். உள்ளே இருப்பார்களால் இந்த காட்சியை பார்த்து தங்கள் திட்டங்களை மாற்றிக் கொள்ள முடியாதா என்ன? தாங்கள் காமான்டர்களால் சூழப்பட்டுவிட்டோம் என்று தெரிந்ததும் உள்ளே இருப்பவர்களை கொல்ல ஆரம்பித்து, ஹோட்டலையே தகர்க்க ஆரம்பித்துவிட்டதாக் செய்திகள் தெரிவிக்கின்றன. தினமணியிலும் இன்றைய முதல் பக்கத்தில் இதனை மேற்கோள் காட்டியிருக்கிறது. இது உண்மையாகும் பட்சத்தில், இதற்கு காரணம் நிச்சயம் மீடியாக்கள் மட்டுமே. இதுவும் ஒருவகையில் கொலை முயற்சி தான். இந்த சேனல்களை தடை செய்தால் தான் என்ன? பிணத்தை சுற்றிலும் ஓலம் இடும் பரதேசிகள்.

மூன்றே மாதம் கூட நிரம்பியிராத குழந்தையை அனைத்துக் கொண்டு, உயிர் பிழைத்து வந்த ஒரு வெளிநாட்டவரிடம் “ஹவ் டு யு ஃபீல் நவ்?” என்று கேட்டார் ஒரு பத்திரிக்கையாளர். அவர் அந்த பத்திரிகையாளரை மற்றொரு கையால் தள்ளிவிட்டு சென்று காரில் ஏறினார். இது கேவலத்திலும் கேவலம். இனி இந்த நாட்டுக்கு வரமாட்டார் போல. கையெடுத்து கும்பிட்டு போனார். மற்ற நாட்டு பத்திருக்கையாளர் இந்த விஷயத்தில் மிக மிக கண்ணியமாக நாடந்து கொள்வர். இதை போன்ற நபர்களை கேள்விகளால் சாக அடிக்க மாட்டார்கள். இந்த கண்ணியம் கூட இந்த நான்கு தொலைகாட்சி நிருபர்களிடமும் இல்லை. செத்துப் பிழைத்தவர்களிடம் போய் கேட்கும் கேள்வியா “ஹவ் டு யு ஃபீல் நவ்?”. கேட்டவரின் உறவினர் இதே போல மாட்டிக்கொண்டு தப்பித்தால் கேட்கட்டும் “ஹவ் டு யு ஃபீல் நவ்?” என்று.

யாரோ ஒருவர் கையில் வெள்ளை துணியை காண்பித்தார், ஹோட்டலின் ஒரு ஜன்னலுக்கு உள்ளே இருந்து கண்ணாடி வழியாக. அவர் யாரென்று கூட தெரியாது. அடுத்த நிமிடம் எச்.டி-யில் வந்த பிரேக்கிங் நியூஸ், தீவிரவாதிகள் சரணடைய விருப்பம் தெரித்துள்ளனர் என்று. ஆனால், இன்று வரை தீவிரவாதிகள் சரணடைவதாக தெரியவில்லை. கடைசிவரை இந்த பிரச்சினையை இழுத்தடித்து தங்களின் பராக்கிரமத்தை காட்டவே விரும்புகின்றனர். முடிவு அவர்களுக்கு தெரிந்துவிட்டது. அவர்களுக்கு தேவையெல்லாம், முடிந்த அளவு சேதாரத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது தான்.

நேற்று ரீடிப் தளத்தில் தாஜ் ஹோட்டல் ஜி,எம். குடும்பத்துடன் தீவிரவாதிகளால் கொலை செய்யப்பட்டுவிட்டதாக தலைப்பு செய்தியாக வந்தது. பின் அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் அந்த செய்தியை காணோம். எங்கே போனது? ரீடிபுக்கே வெளிச்சம். (பிற்சேர்க்கை: தாஜ் ஹோட்டல் ஜி,எம். குடும்பத்துடன் தீவிரவாதிகளால் கொலை செய்யப்பட்டுவிட்டது உறுதிசெய்யப்பட்டது). But still he is at work (Updated @ 1:44 PM 11/29/2008).

இபடிப்பட்ட ஆர்வக்கோளாறுகள் என்.டி.டி.வி முதல் இட்லி வடை உள்ளது (வலைப்பதிவர்கள் மீட்டிங்கை ஆர்வக்கோளாரினால் ஃபோட்டோ போட்டு வாங்கிகட்டிக் கொண்டது போல).

பத்திரிக்கை தர்மம் என்று ஒன்று இருந்ததே, எங்கே போனது?

அதனால் தான் சொல்கிறேன், தீவிரவாதிகளை விட, முதலில் இந்த மீடியாவை தாக்குங்கள்.

இதை தொடர்பான பழைய பதிவு.

பிற்சேர்க்கை

ஆரம்பித்துவிட்டது அரசியல்

Mumbai attacks won’t affect Congress prospects: Sheila
New Delhi, November 28, 2008

As Delhi readies itself for polls on Saturday, the overwhelming question at the Congress office is whether the Mumbai terror attacks will affect the party’s prospects. Delhi CM Shiela Dikshit maintains that it won’t.

As she told her aides this morning when the question came up over breakfast, “This is not like Kandahar where the terrorists were freed. Here, decisive action was taken.” The BJP scoffs at this as bravado and maintains that Mumbai was the last nail in the coffin of a government that will be buried at the hustings largely because of its poor record on terror.

And that the effect of this will be felt at the assembly level as well, particularly Delhi where law and order is not a state subject. Unfortunately neither the Prime Minister nor the Home Minister have been very reassuring on their statements on terror. However, on the last day of the campaign, terror has replaced development on the agenda for the Delhi polls. The allegations are somewhat predictable.

The BJP has already made terror its plank even at the local assembly level and attacked the Congress for sitting on Afzal Guru’s file. The party’s chief ministerial candidate VK Malhotra told India Today that one of the first things he would do if he takes over as chief minister would be to sign the file that okays the hanging of Afzal Guru.

The Dikshit camp for its part was quick to embarrass the BJP for its U-turn on ‘hindu terror’ with slogans like: “Mumbai mein shaheed huye ATS chief Karkare ko kal tak deshdrohi kehne wali BJP ko kya hum vote de payenge ?” The rhetorical bravado aside, the Delhi Congress is worried that the Mumbai attacks could affect its urban votebank.

The BJP ofcourse will try and make the UPAs track record on terror an issue at the polls tomorrow. What may save the Congress is the fact the rather uncharacteristic swift and decisive action taken in Mumbai. For the first time in India’s history there were no negotiations with the terrorists.

This is the image that Delhites will take to the polls tomorrow. By the time the secuirty lapses come to light, and the Central government is exposed for its intelligence failure, the Delhi polls will be over. This is the only factor that may save Dikshit from losing out on the terror plank tomorrow.

5 comments நவம்பர் 28, 2008

குளோபல் மெல்ட்டவுன் மற்றும் சிக்கன நடவடிக்கைகள்










2 comments நவம்பர் 24, 2008

சீனச்சிரிப்பும் சில ஜோக்ஸும்…

ஒரு சீன படத்தில் (Wheels on Meals) பார்த்த மனநோய் மருத்துவமனை.

ஜாக்கியும் அவன் நண்பனும் அவன் நண்பனின் தந்தையை பார்க்க அந்த மனநோய் மருத்துவமணைக்கு வருகிறார்கள்.

வரும் வழியில் ஒருவன் இடம் வலமாக தலை சாய்த்து சாய்த்து வருகிறான்.

நபர் 1: டிங்…டாங்…டிங்…டாங்…டிங்…டாங்…
ஜாக்கி: என்ன பன்னுற?
நபர் 1: நான் கடிகாரம். சரியான நேரத்தை சொல்லுவேன்.
ஜாக்கி: அப்படியா? இப்போ மணி என்ன?
நபர் 1: இப்பொழுது மணி 2:30
ஜாக்கி: இல்லை. இப்போ மணி 2:45.
நபர் 1: ஆ! அப்போ நான் ஸ்லோவா போறேனா. (வேகமாக) டிங்.டாங்.டிங்.டாங்.டிங்.டாங்.

உள்ளே செல்ல அங்கே அவன் நண்பனின் தந்தை ஒரு சிறு கிண்ணத்தில் தூண்டில் போட்டு மீன் பிடித்து கொண்டிருக்கிறார். கவனிக்க, அப்பா எப்பவுமே முகத்துல ஒரு சீரியஸ்னஸோட தான் பேசுவார், மிலிட்டெரி மேன் மாதிரி.

ஜாக்கி: என்ன செய்றீங்க?
அப்பா: ஷ்…சத்தம் போடாத. சத்தம் கேட்டா மீன்கள் ஓடிடும்.

அங்கே பின்னால் ஒருவன் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருக்கிறான்.

ஜாக்கி: அவன் என்ன பன்னுறான்?
அப்பா: அதுவா? அவன் எப்பவுமே தனக்குத்தானே ஜோக் சொல்லி சிரிச்சிக்குவான்.

திடீரென்று அவன் முகம் சுழிக்க…

ஜாக்கி: இப்போ என்ன பன்னுறான்?
அப்பா: அந்த ஜோக் அவன் ஏற்கனவே கேட்டிருக்கான். அதனால அவன் அழுவறான்.

அப்பொழுது அந்த கடிகார ஆள் அங்கே வந்து ஆ-னு கத்த (அலார ஒலி)…அப்பா அவன் தலையில் தட்டி (அலாரத்தை நிறுத்தறாராம்)

அப்பா: ஆ! மணி மூனு ஆயிடுச்சா. எனக்கு வேற வேலை இருக்கு.
என்று சொல்லி அங்கிருந்து நகருகிறார்.


“எதுக்குடா அவன அடிச்சே”
“ஆறு வருஷத்துக்கு முன்ன என்ன தேவாங்குன்னு சொன்னான்”
“அதுக்கு இப்போ ஏன் அடிக்கிறே?”
“நான் நேத்து தான தேவாங்க பாத்தேன்…”

“தலைவர் இப்போ சின்ன வீட்டுல இருக்கரு”
“எப்படி சொல்ற?”
“நீங்கள் டயல் செய்த என் தற்சமயம் ‘லைட் ஆஃப்’ செய்யப்பட்டுள்ளது’ன்னு சொல்லுதே…”

“அம்மா அடிச்சதுக்கு ஏண்டா இப்படி அழறே?”
“உங்கள் மாதிரி என்னால அடி தாங்க முடியாது”

“லோன்ல மாடு வாங்கிட்டு, கட்டாம போனா என்ன ஆகும்ன்னு தெரியுமா?”
“தெரியும் ஐயா…மாடு தொலஞ்சிடும்”

“என்ன…நம்ம செல் ரிங் ஆனதும் தடார்ன்னு கீழ வெச்சுட்டு விழுந்து கும்பிடுறாரு?”
“வந்திருக்கிறது தலைவரோட கால். அதான்”.

“அந்த தொழிலதிபர் கிட்ட நான் 30 லட்சம் வாங்கியிருக்கிறதா எதிர்கட்சிக்காரங்க சொல்றாங்களாமே?”
“விடுங்க தலைவரே! அவங்களுக்கு தெரிஞ்சது அவ்வளவுதான்…”

“யார் என்ன சொன்னாலும் அப்படியே நம்பகூடாது…ஏன்னு கேள்வி கேட்கணும்…”
“ஏன்?”

மன்னர்: “யாரங்கே?”
குரல்: “யாருமில்லை…”

போலீஸ்: “ஏண்டா குடியிருந்த வீட்டுக்காரரை கொலை பன்னினே?”
கொலையாளி: “அவர்தான் அடிக்கடி காலி பன்னுன்னு சொன்னார் எசமான்…”

“சிஸ்டர். அந்த பேஷன்ட் எப்படி செத்தாரு?”
“நீங்க கிட்னி எடுத்தது தெரியம, நானும் ஒரு கிட்னியை திருடிட்டேன் டாக்டர்”

“நேத்து ராத்திரி உங்கள ஒரு திருடன் வந்து அடிச்சிருக்கான். ஏன் கத்தவேயில்ல?”
“வழக்கம் போல என் மனைவி தான் அடிக்கிறான்னு அமைதியா இருந்துட்டேன் இன்ஸ்பெக்டர்”

ஆசிரியர் : மூண்றாம் உலகப் போர் வந்தால் என்ன ஆகும் ?
மாணவன் : (சோகமாக) வரலாறில் இன்னும் நிறைய படிக்க வேண்டி இருக்கும்.

“‘இது எதிர்கட்சியோட சதி’-ன்னு சொல்றாரே தலைவர், எதற்கு?”
“‘உங்களுக்கு குழந்தை பிறந்திருக்கு தலைவரே’-ன்னு சொன்னேன்”


SMS தத்துவம்

தூங்கப் போறதுக்கு முன்னாடி குட்நைட் சொல்லலாம், ஆனா, தூங்க எந்திரிக்கிறதுக்கு முன்னாடி குட்மார்னிங் சொல்லமுடியுமா?

கண்டக்டருக்கும் டிரைவருக்கும் என்ன வித்தியாசம்?
கண்டக்டர் தனித்தனியா டிக்கெட் கொடுப்பார். டிரைவர் மொத்தமா டிக்கெட் கொடுத்திடுவார்.

எறும்பு நெனச்சா யார் காதை வேணும்னாலும் கடிக்கலாம்; ஆனா யார் நெனச்சாலும் எறும்பு காதை கடிக்க முடியாது.

ஒரு எறும்பு நூறு யானையை கடிக்கும். ஆனா, நூறு யானைங்க சேர்ந்தாலும் ஒரு எறும்ப கடிக்கமுடியாது.


“எங்க கட்சித்தலைவரை போட்டியின்றி தேர்ந்தெடுக்க நடத்துன கூட்டத்துல கைகலப்பாயிடுச்சு…”
“அடடே…அப்புரம்?”
“வேட்டியின்றி தேர்ந்தெடுக்கவேண்டியதாப் போச்சு”

“என்னய்யா இது…நடைபாதைல நின்ன பயணிகள்லாம் திடீட்னு தண்டவாளத்துல இறங்கி நிக்குறாங்க…!?”
“பின்னே. இரயில் 2வது நடைமேடைக்கு வரும்னுல்ல அறிவிச்சாங்க…!?”

“ஜோசியரே! நான் கபாலி பொண்ணை காதலிக்கிறேன். கை கூடுமா?”
“ம்ஹூம்! குறையும்!”

“ஆபரேஷன் பண்ணும் போது டாக்டர்கள் முகமூடி போட்டுக்கறாங்களே, ஏன்?”
“அதுவா? கிட்னி திருடினது யாருன்னு அடையாளம் தெரியாம இருக்கிறதுக்குத்தான்!”

“தலைவரே! அறிக்கை விடும் போது கொஞ்சம் கவணிக்க கூடாதா?”
“ஏன்?”
“உங்களை திட்டி நீங்களே அறிக்கை விட்டுட்டீங்க”


“ஜாக்கட்ல கையவிட்டு பர்ஸ எடுக்கிற வரை என்னம்மா பண்ணிகிட்டு இருந்த?”
“அந்த படுபாவி பர்ஸத்தான் எடுக்கறான்னு எனக்கெப்படி தெரியும் இன்ஸ்பெக்டர்?”

“நம்ம கதாநாயகன் நூறடி உயரத்துல இருந்து டூப் போடாம நானே தான் குதிப்பேன்னார்…”
“டைரக்டர் என்ன சொன்னார்?”
“அந்த ஷாட்டை மட்டும் கடைசியா எடுத்துக்கலாம்னு சொல்லிட்டார்”



பிற்சேர்க்கை:

“கடத்திட்டு வந்த பொண்ண இன்னும் மிரட்டவே ஆரம்பிக்கல பாஸ்”
“ஏன்டா?”
“செல்போன்ல யாரோடவோ நிறுத்தாம பேசிகிட்டே இருக்கா…”

“தோசைய ஆர்டர் பன்னிட்டு ஏன் சார் அவசரப்படுறீங்க?”
“அதுக்குள்ள விலை ஏறிடுமோங்கிற பயம் தான்…”

“ராத்திரியானா அந்த கோயில் மண்டபத்துல யாரும் படுத்துக்க மாட்டாங்க”
“ஏன்?”
“அங்க இருக்கிற யானைக்கு தூக்கக்துல நடக்குற வியாதி இருக்காம்…”

“முன்ன பிரசவதுக்கு வந்தா குழந்தை தான் மாறும்”
“இப்ப?”
“பொன்டாட்டியே மாத்தி அனுப்பறாங்க…”

“தலைவர் பிறந்த நாளுக்கு எடைக்கு எடை என்ன கொடுத்தாங்க?”
“உடம்பு பூரா வியாதிங்கறதுனால எடைக்கு எடை மாத்திரையா கொடுத்திட்டாங்க”

“மயக்கம் போட்டு விழுந்த தலைவர், கண்முழிச்சதும் என்ன கேட்டார்?”
“இப்போ நான் எந்த கட்சியில இருக்கேன்னு கேட்டார்…”

“அந்த டைரக்டர் கேட்டாருங்கிறதுக்காக அவரோட படத்துல நீங்க நடிச்சிருக்கக்கூடாது தலைவரே!”
“ஏன்யா…?”
“இப்ப பாருங்க…’இதுவரை தொகுதிப் பக்கமே தலை காட்டாதவர், எங்கள் படத்தில் தலையைக் காட்டிடுள்ளார்’னு விளம்பரம் பண்றாங்க…!”

“நான் அஞ்சு வயசுலயே அரசியலுக்கு வந்தவன்னு தலைவர் சொல்றாரே…?”
“அவர் படிக்காதவர்ங்கறதை சூசகமா சொல்றாரு…!”

“என் மனைவி ரொம்ப நல்லவ”
“அப்புறம் ஏன் ரெண்டாவது கல்யாணம் பன்னிகிட்ட?”
“அவ நல்லவன்னு ரெண்டாவது கல்யாணம் பண்ண பிறகு தான தெரிஞ்சது…”

“என்னது உங்க பேரு ‘நல்ல காலம்’மா?
“ஆமாம். எங்க வீட்டு வாசல்ல குடுகுடுப்பைக்காரன் நின்னு ‘நல்ல காலம் பொறக்குது…நல்ல காலம் பொறக்குது’ சொன்னப்போ நான் பிறந்தேனாம்…”

ஆற்காடு வீரா’ஸ்’வாமி ஸ்பெஷல்…

“நான் மின்சாரத்துறையில வேலை செய்யுறேன்”
“அப்ப வேலையே இல்லைன்னு சொல்லுங்க”

“இன்னும் எங்க கிராமத்துக்கு மின்சாரமே வரலைன்னு புகார் கொடுக்கலாம்னு வந்தேன். ஆனால், இங்கேயும் மின்சாரம் இல்லையாமே?”

“கொழந்தை பொறந்துடுச்சு. ஆணா, பெண்ணானு கரன்ட் வந்தப்புறம் தான் சொல்லமுடியும்”

பிறந்த குழந்தை: “என்னடா இது. நான் பொறந்துட்டேன்னு நர்ஸ் சொல்லிச்சு. ஆனா, வெளியிலையும் ஒரே இருட்டா இருக்கே…!”

8 comments நவம்பர் 3, 2008


மேல்

அண்மைய இடுகைகள்

அண்மைய மறுமொழிகள்

சீனு மேல் வெஜிடேரியனிசம்
shri ramesh sadasiva… மேல் உ.போ.ஒ: ‘அறிவாளி’…
shri ramesh sadasiva… மேல் வெஜிடேரியனிசம்
சீனு மேல் உ.போ.ஒ: ‘அறிவாளி’…
nigdyn மேல் உ.போ.ஒ: ‘அறிவாளி’…

சுவடுகள்

Blog Stats